திருமணத்தில் மாதுளம் கன்று அன்பளிப்பு . காரைதீவில் ஒரு முன்மாதிரியான சம்பவம்.



காரைதீவு சகா-
காரைதீவில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் ஒரு முன்மாதிரியான நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

காரைதீவு ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (6) புதன்கிழமை நடைபெற்ற திருமண வைபவத்தின் போது வருகை தந்த அனைவருக்கும் ஒவ்வொரு மாதுளம் கன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மணமக்களால் இந்த மாதுளம் கன்று வழங்கப்பட்டமை ஒரு முன்மாதிரியான செயற்பாடு என்று வருகை தந்தவர்கள் கூறி வாழ்த்தினார்கள்.

பொறியியலாளர் நிதர்ஷன் பட்டதாரி பிரம்மியா தம்பதிகளின் திருமணத்தின் போது இந்நிகழ்வு இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :