புனித ஹஜ்ஜுப் பெருநாள் திறந்த வெளியிலான தொழுகை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மண்ணு ஸல்வா வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸஹ்வி நடாத்தியதுடன், திறந்த வெளியிலான தொழுகையில் அதிகமான ஆண்களும் பெண்களும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகையை அனுஷ்டிக்கின்றனர். பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment