ஹம்பாந்தோட்டை ஆழ்கடலில் தத்தளித்த வாழைச்சேனை மீனவர்கள் மீட்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்பாந்தோட்டை ஆழ்கடலில் தத்தளித்த வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த 9 ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க இயந்திரப் படகில் மூன்று மீனவர்கள் சென்றிருந்தனர்.

இவ்வாறு சென்ற இயந்திரப் படகின் என்ஜின் பழுதடைந்ததால் மூன்று மீனவர்களும் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் தத்தளித்துள்ளனர்.

இவ்வாறு தத்தளித்த மூன்று மீனவர்களும் கப்பல் ஒன்றின் மீது நேற்று மீட்கப்பட்டு, காலி துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்கள் சென்ற 34 அடி நீளமான இயந்திரப் படகை கரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :