உதுமான் கண்டு கிண்ண இறுதி போட்டி : பிலைங் கோஸ் எதிர் ஹொலி ஹீரோஸ் ஆடவுள்ளது.



நூருல் ஹுதா உமர்-
மூக சேவையாளரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் அவர்களின் வழிகாட்டலில் நாபீர் பவுண்டேசன் அனுசரணையுடன் சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தினால் சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதானத்தில் நடாத்தப்படும் உதுமான் கண்டு ஞாபகார்த்த கிண்ணத்தின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சாய்ந்தமருது பீமா விளையாட்டு கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது பிலைங் கோஸ் விளையாட்டு கழகம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழகத்தை வீழ்த்தி ஹொலி ஹீரோஸ் விளையாட்டு கழகம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் இச்சுற்றுப் போட்டியின் இறுதி போட்டிக்கு போட்டியின் முழு அனுசரணையாளரும் சமூக சேவையாளருமான பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கும் பிரமாண்டமான இறுதி போட்டி அடுத்த மாதத்தில் முற்பகுதியில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :