நிந்தவூர் பிரதேச சபைய புதிய உறுப்பினராக கே.எல். றபீக் சத்தியப் பிரமாணம் !!



நூருள் ஹுதா உமர்-
நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக செயற்பட்ட ஆதம்பாவா அப்துல் வாகிது கடந்த மாதம் உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். இந்நிலையில் அவரின் இடத்தை நிரப்பும் பொருட்டு கலந்தர் லெவ்வை றபீக் நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் முன்னிலையில் வியாழக்கிழமை (30) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் தாஹீர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பெருந்தொகையினர் கலந்து கொண்டார்கள்.

இங்கு உரையாற்றிய தவிசாளர் தாஹிர், இன்றும் ஒரு புதிய உறுப்பினர் பதவியேற்றுக் கொண்டதொரு சிறந்த முன்மாதிரி தன்மையை நிந்தவூர் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினர் காட்டியுள்ளனர். இத்தகைய முன்மாதிரியை நாம் நிகழ்த்துவதற்கு காரணமாக இருக்கின்ற முன்னாள் உறுப்பினர்களை நாம் ஒரு போதும் மறக்க முடியாது. நாம் வாய்மொழி மூலமாக செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக அவர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள். அவர்களுக்கு கட்சியின் தலைவர் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று பதவியை ஏற்றுக் கொண்ட கெளரவ உறுப்பினரை வரவேற்பதோடு அவர் தனது பணிகளை மக்களுக்காக கட்சி பேதங்களைக் காட்டாது செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர் கலந்தர் லெவ்வை றபீக் அவர்கள் உரையாற்றுகையில், இது வரை இராஜினாமா செய்து உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுத்த சகல முன்னால் உறுப்பினர்களுக்கு நன்றி கூறியதோடு, கட்சியின் தலைவருக்கும், தவிசாளர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், கட்சியின் வளர்ச்சிக்கும், நிந்தவூரின் அபிவிருத்திகளுக்கும் தவிசாளர் தலைமையில் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :