இம்மாதம் 4, 5ஆம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 28 தங்கம், 21 வெள்ளி மற்றும் 7 வெண்களப் பதக்கங்களைப் பெற்று கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 08 அஞ்சலோட்டப் போட்டிகளில் 5 முதலிடமும், 2 இரண்டாமிடங்களையும் பெற்று அஞ்சலோட்டப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன், ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிப்பிரிவில் 131 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றிக்காக, மைதானத்திற்கே நேரில் சென்று மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்முனை சாஹிராக் கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS), மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்திய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், கல்லூரியின் முன்னாள் மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற மற்றும்
பங்குபற்றிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்கத் தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு (SDEC) மற்றும் பழைய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
0 comments :
Post a Comment