இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
நாட்டில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மின்சார அடுப்புக்களையே நம்பியிருக்கும் நிலையில் மின்சார கட்டணத்தை மும்மடங்காக உயர்த்துவது மரத்தால் விழுந்தவனை மாடு மிதிப்பது போன்றதாகும்.
வீடுகளுக்காக தற்போது காணப்படுகின்ற 1 முதல் 30 அலகுகளுக்கான நிலையான மின் கட்டணத்தை 30 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதானது மிகப்பெரிய அநியாயமாகும்.
இவ்வாறு பாரிய அதிகரிப்பை ஏற்படுத்துவது நாட்டு மக்களின் அவஸ்தைகளை புரிந்து கொள்ளாத மனிதாபிமானமற்ற முயற்சியாகும்.
ஆகவே மின்சார கட்டணத்தை உயர்த்துவதை மீள் பரிசீலனை செய்து ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் பாதிக்கப்படாத வகையில் செய்ற்படும்படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment