நாளை அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்.



காரைதீவு நிருபர் சகா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்  நாளை 23ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது.
முன்னதாக, நேற்று 21ஆம் திகதி கருமாரம்பம் ,கிரியைகள் ஆரம்பமாகின. இன்று 22 ஆம் தேதி புதன்கிழமை அம்பாளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறும்.
நாளை 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பக்ஷ மகாகும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தலைவர் கா.தியாகராசா மற்றும் செயலாளர் செ. முருகுப்பிள்ளை (ஆசிரியர் )தெரிவித்தனர் .
பிரபலசிவாச்சாரியார் சிவ ஸ்ரீ க.கு சச்சிதானந்த சிவம் குருக்கள் தலைமையில் இந்த மகா கும்பாபிஷேகம் இடம்பெற இருக்கின்றது.

இன்று எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் 22ஆம் தேதி இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆலய செயலாளர் செ. முருகுப்பிள்ளை தெரிவித்தார்.

நாளை 23ஆம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 24-ஆம் தேதி தொடக்கம் மண்டலாபிஷேக பூஜைகள் யூலை மாதம் நான்காம் தேதி வரை நடைபெறும் .
யூலை 5ஆம் திகதி பாற்குடபவனி பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடையும்.

அதனைத் தொடர்ந்து அன்று மகா சங்காபிஷேகம் இடம்பெற இருக்கின்றது என ஆலய செயலாளர் செ.முருகுப்பிள்ளை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :