ஏறாவூர் நகர சபை தவிசாளரின் எண்ணக்கருவில் பாத்திமா மகளிர்நூலகம் எம்.எஸ்.நழீமினால் திறந்து வைக்கப்பட்டது.



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகர சபை தவிசாளர் எம்.எஸ்.நழீம் அவர்களின் எண்ணக்கருவில் பாத்திமா மகளிர்நூலகம் (பெண்களுக்கான நூலகம்) மகளிர் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று ஏறாவூர் 06D கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம் அவர்களும்.

கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜனாபா நிஹாரா மௌஜூத், ஏறாவூர் நகர சபையின் கௌரவ பிரதி தவிசாளர் ASM றியாழ், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஜனாபா Dr சாபிறா வஸீம், ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாபா MAH சிஹானா அவர்களும். விசேட அதிதிகளாக ஏறாவூர் நகர சபையின் கௌரவ உறுப்பினர் UL சுலைஹா உம்மா, கௌரவ உறுப்பினர் K சபிதா உம்மா அவர்களும்.

சிறப்பு அதிதிகளாக ஜனாபா MU.ஜாஹிரா, ஜனாப் MSM சப்றாஸ் தலைவர் (06D_RDS), ஜனாப் A சீனி முகம்மது தலைவர் சனசமூக நிலையம், ஜனாப் AS சுபைதா உம்மா தலைவி (06D_WRDS) உட்பட ஏறாவூர் நகரசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ தவிசாளர் பெண்களின் ஆளுமைகளை விருத்தி செய்யும் நோக்கில் இவ் பாத்திமா மகளிர் நூலகம் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்படுகின்றது. அத்தோடு பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அஹமட் பரீட் மைதானத்தில் இடம் ஒதுக்கப்பட்டு பயிற்சிகளை மேற் கொள்வதற்கு மைதானத்தில் வெளிச்சமூட்டப்பட்டுள்ளது. அத்தோடு மாணவிகளின் நலன் கருதி மட்/மம/அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) யில் உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மகளிர் வாசிகசாலையை பொதுமக்கள் பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் இவ்வாசிகசாலையில் எதிர்வரும் வாரங்களில் பெண்களுக்கான சிங்கள.ஆங்கில பாட மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கும்.மற்றும் பெண்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்தும் வகையில் சுய தொழில் முயற்சிகளுக்கான இலவச தொழில் வகுப்புகள்,பயிற்சிகள் என்பன வழங்குவதோடு அவர்களுக்கான ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :