அக்கரைப்பற்று-பனங்காடு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு...!



நூருல் ஹுதா உமர்-
ம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி. ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (29) இரவு வேளையில் பனங்காடு பாலத்தின் அருகே இடம்பெற்ற விபத்தின்போதே இத்துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்தில் விநாயகபுரத்தை சேர்ந்த இருவர் பலியானதுடன் பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீதியின் அருகே இருந்த தூண் ஒன்றில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :