அபீன் போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தர் கைது



பாறுக் ஷிஹான்-
பீன் என்றழைக்கப்படும் போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஞாயிற்றுக்கிழமை(15) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பொலனறுவை மாவட்டம் கதுருவெல பகுதியில் இருந்து அரச பேரூந்தில் அபின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமையவே காத்தான்குடி டெலிகொம் சந்தியில் வைத்து இச்சந்தேக நபர் கைதானார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கதுருவெல பகுதியை சேர்ந்தவர் எனவும் 50 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் அடங்கிய அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டன.

மேலும் கைதான சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :