அம்பாறை மாவட்ட தொலைதூர பறவை விளையாட்டு சபையின் 2021ஆம் ஆண்டின் சிறந்த தொலைதூர பறவைகளும் அதன் பராமரிப்பாளர்களுக்குமான கௌரவிப்பு விழா மருதமுனை கலாச்சார மண்டபத்தில் (12 ) நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் இடம் பிடித்த தொலைதூர பறவை பராமரிப்பாளருக்கான சான்றிதழ் மற்றும் பணப்பரிசினையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியின் பகுதி நேர விரிவுரையாளர் டி. எம்.ரிபாய் மற்றும்
ஏ. சி. ஏ.மாஹிர், கே.திவியன் ,எஸ்.குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு ,அம்பாறை மாவட்ட தொலைதூர பறவைகள் விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பாளர் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment