காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இ
கடந்த 3நாட்களில் தொடர்ச்சியாக இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
இதற்கமைய இப் பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாக காணப்படுவதால் தங்களது வீட்டை சுற்றிலும் அதனை சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை ஏலவே காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டிருந்ததற்கமைவாக மக்கள் தயாராகவிருந்தனர்.
குறித்த விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் இடம்பெற்றமைகுறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment