மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள 21 பாடசாலைகளை நாளை (21) ஆரம்பிக்க நடவடிக்கை



மினுவாங்கொடை நிருபர்-
மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள 21 பாடசாலைகளை, நாளை (21) வியாழக்கிழமை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை கல்வி வலயக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல 21 பாடசாலைகளையே இவ்வாறு திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலை வளாகங்கள் முழுமையாகத் துப்புறவு செய்யப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சுகாதார அமைச்சின் வழி காட்டல்களுக்கு அமைய ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :