கிளங்கன் வைத்தியசாலைக்கு தொ.தே. சங்கம் சார்பில் உதயா எம்பி தலைமையில் உபகரணங்கள் வழங்கி வைப்பு



நுவரெலியா மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கிளங்கன் வைத்தியசாலைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமாரின் தலைமையில் இன்று முற்பகல் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் நோயாளர்களுக்கு ஒக்சிஜன் வழங்கும் சுவாச குழாய் கட்டளை மற்றும் முகக்கவசம் என்பன உள்ளடங்கும். கொரோனா வைரஸ் மற்றும் ஏனைய கடும் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சிகிசசைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு ஒக்சிஜன் வழங்கப்படுகிறது.
கிளங்கள் வைத்தியசாலைக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டுள்ள போதும் அதனை நோயாளர்களுக்கு பொருத்தும் குழாய் கட்டளைக்கு பற்றாக்குறை காணப்பட்டது.
இது குறித்து கிளங்கன் வைத்தியசாலை பணிப்பாளர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த குழாய் கட்டளைகள் சில தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

அவசர தேவை கருதி இந்த குழாய் கட்டளைகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கிய தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் அதன் தலைமைக்கும் கிளங்கள் வைத்தியசாலை பணிப்பாளர் நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமாருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ.ஶ்ரீதரன், பிரதி பொதுச் செயலாளர் கல்யாணகுமார், ஹட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினரகள், பாலா, ராமேஸ்வரி, கொட்டக்கலை பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன், மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக், தனிப்பட்ட செயலாளர் ஶ்ரீதரன் மற்றும் அமைப்பாளர் விஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :