தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் மீது பொலீசார் கடும் நடவடிக்கை !



நூருள் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மக்கள் முழுமையாக அனுசரித்து வருகின்றனர்
நேற்று இரவு 10 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்துக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன

அத்துடன் வீதிகளில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமைகளை கண்காணித்து வருவதுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் அவசியம் இன்றி வெளியில் நடமாடுபவர்கள் குறித்து கண்காணித்து வருவதுடன் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறிப்பாக அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சாய்ந்தமருது நிந்தவூர் காரைதீவு கல்முனை சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :