கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோருக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேசத்தில் கொரோணா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோருக்கும், முதியோர் இல்லங்களுக்கும், உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம் பெற்றது.

அம்பாரை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரச சார்பற்ற இணையத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே ஜெகதீசன் கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், அம்பாரை மாவட்ட இணையத்தின் தலைவர் பரமசிங்கம், இணைப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :