மண்சரிவுகள் - போக்குவரத்து பாதிப்பு



க.கிஷாந்தன்-
ட்டன் கொழும்பு பிரதான வீதியில் சீரற்ற காலநிலைகாரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன நகரத்தில் மரத்துடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டியொன்றின் மீதும் லொறி ஒன்றின் மீதும் இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. அத்துடன் மண் திட்டொன்றும் சரிந்துள்ளது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரத்தை மற்றும் மண்சரிவையும் அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. சீரற்ற காலநிலை நிலவி வருவதால் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :