கேஸ் விலை அதிகரிக்கப்பட்டது



J.f.காமிலா பேகம்-
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 363 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1,856 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிய ரக லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற பின்னணியிலேயே, எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :