யாழில் மாபெரும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்



யாழ் லக்சன்-
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (10.07.2021) மு.ப. 9.30 மணியளவில் யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

உணவுப் பொருட்கள் - எரிபொருட்களின் விலைகளை உடனே குறை, விவசாயிகள் - மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்,கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் வழங்கி இயல்பு வாழ்வுக்கு வழி செய், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இவ் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ளதுடன் இப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அதன் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலாளரும், வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான தோழர் செல்வம் கதிர்காமநாதன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :