வடக்குமாகாண உயர் பதவிகளில் பெரும்பாண்மை இனத்தவர் நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தில் உயர் பதவிகளுக்கு ஆளுமையுள்ள தகுதியான தமிழ் அதிகாரிகள் பலர் இருக்கின்ற போது உயர் அதிகாரிகளாக பெரும்பாண்மை இனத்தை சார்ந்த தமிழ் மொழி தேர்ச்சி இல்லாத அதிகாரிகளை நியமித்தல் ஊடாக மத்திய ஆட்சியாளர்களின் அதி உச்ச சர்வாதிகாரப் போக்கு வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக 26/07/2021 பதவி ஏற்ற பெரும்பாண்மை இனத்தவர் தொடர்பில் தனிப்பட்ட முரண்பாடுகள் வடக்கு மக்களுக்கு இல்லை. ஆனால் இந்த பிரதம செயலாளர் நியமனத்திற்கு ஐனாதிபதியின் பணிப்பில் வியத்கம அமைப்பினால் நடாத்தப்பட்ட தேர்வில் அதிக புள்ளிகள் எடுத்த தமிழ் அதிகாரி இருக்கும் போது அரசியல் தலையீட்டில் பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டமை இனவாத அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தை உறுதி செய்துள்ளது.
வடக்கு மாகாண மக்களில் ஒரு பகுதியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தங்கள் வாக்குகளை பொய்யான வாக்குறுதிகளையும் பணத்தையும் சாராயத்தையும் வழங்கிய அரசாங்கத்தின் அடிவருடித் தமிழர்களுக்கு அளித்தமையின் அறுவடை தற்போது அவர்கள் வடக்கில் அதிகாரிகளை வைத்து தமது ஆட்டங்களை ஆட அடிபட்டதன் எதிரொலியே ஒரு தகுதியான தமிழ் அதிகாரியை வடக்கு மக்கள் இழந்ததுடன் மொழி தெரியாத ஒருவரின் நியமனத்திற்கு வழி சமைத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் உயர் பதவிகளின் அதிகாரிகள் நியமனத்தில் ஆட்சியாளர்களின் ஆட்டம் ஆரம்பித்துள்ளது எதிர்காலத்தில் ஆளுநர்,மாவட்ட செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் பதவிகளுக்கு தகுதியான தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு பெரும்பாண்மை இனத்தின் ஆளும் ஆட்சியாளர்களின் நெருக்கமானவர்கள் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தக் கூடியவர்கள் அமர்த்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் வெளிப்படுகின்றது.
வடமாகாண உயர் பதவிகளில் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு எதிர்காலத்தில் தமிழர் தாயக இருப்பில் பல பிரச்சினைகளை உருவாக்கும். மாகாண அதிகாரங்களின் பறிப்பை கூர்மையடையச் செய்யும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment