கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் : மக்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பு


நூருல் ஹுதா உமர்-

சா
ய்ந்தமருது, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் மணி இன்று காலை 8.00 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது. பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர், கற்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் என பலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணி சிறப்பாக அந்தந்த பிரதேச காதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

மேலும் அரச அதிகாரிகள், மக்களுடன் நேரடி தொடர்பை கொண்டிருப்போர், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலருக்கும் பாடசாலைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வள நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் அவர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகிறார். மக்கள் உற்சாகத்துடன் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வருவதை காணக்கூடியதாக உள்ளது.


UMAR LEBBE NOORUL HUTHA UMAR
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :