ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் றாஸிக் றியாஸ்தீன் அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புக்கள் வழங்கப்படுகின்றன.
அதேவேளை ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான இர்சாத் இமாமுதீனின் வேண்டுகோளுக்கினங்க கிண்ணியாவுக்கு 100 மேற்பட்ட இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் நிகழ்வு (22.) இன்று கிண்ணியா நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்வழங்கள் அமைச்சரின் நெருங்கிய நண்பரும் இணைப்புச் செயலாளருமான மரைக்கார்,திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் றாஸிக் றியாஸ்தீன் ஆகியோருடன் கிண்ணியா நீர்வழங்கள் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி றிபாஸ்,ஊடகவியலாளர் இர்ஸாத் இமாமுத்தீன் ஆகியோருடன் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment