சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். அல்-அமீன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட மூவாயிரம் (3000) கோவிட்-19
கொரோணா தடுப்பூசிகளும் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் நாளை (26) தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் சாய்ந்தமருதின் எந்த நிலையங்களிலும் இடம்பெறாதென சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். அல்-அமீன் றிசாத் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்று (24) சனிக்கிழமை கோவிட்-19
கொரோணா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டு முறையாக, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்திலும் மற்றும் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுகாதார நிலையத்திலும் (APC) ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நேற்று காலை 08 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை 1162 பேருக்கு கோவிட் -19 கொரோணா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டன.
இரண்டாவது நாளான
இன்றும் (25) ஞாயிற்றுக் கிழமை மூன்று நிலயங்களிலும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவுற்றதுடன் இன்று (26) மாத்திரம் 1838 பேருக்கு கோவிட்-19
கொரோணா தட்டுப்பூசிகள் ஏற்றப்பட்டன. .
மிக விரைவில் அடுத்த கட்டமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு பத்தாயிரம் (10,000) தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
மிகச் சிறப்பான முறையில் நடாத்தி முடித்த கல்முனை RDH, MOH, S/M DH மற்றும் AMH ஆகிய வைத்தியர்கள், PHI, தாதியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள் முப்படைகள் ஆகியோருக்கும் எமது மருதூர் சார்பாக நன்றியினை தெரிவிக்கின்றோம்.
0 comments :
Post a Comment