துறைநீலாவணை ,பெரியநீலாவணை மக்களுக்கு உலருணவு!



வி.ரி.சகாதேவராஜா-
மகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த அம்பாறை -மட்டக்களப்புமாவட்ட எல்லைக்கிராமமான துறைநீலாவணை மற்றும் பெரியநீலாவணை மக்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.

தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பசியைப்போக்க 'கனடா டொராண்டோ சீலன் றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம்' இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.

இந்த உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை நேற்று வழங்கிவைத்தார்.
சமுகசெயற்பாட்டாளர் சசி ,ஜிப்ரியின் ஒழுங்கமைப்பின்கீழ் அங்குள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.

பயனாளிகள் கருத்துரைக்கையில் 'கனடா டொராண்டோ சீலன் றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்திற்கு' நன்றி தெரிவிக்கின்றஅதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று கூறினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :