யாழ் வடமராட்சி முள்ளியில் ஜப்பான் ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக அமைக்கப்பட்ட சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்றையதினம் 27.6.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஐிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஐாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக குறித்த நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்
மாலை 3 மணிக்கு பலாலி வடக்கு அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தையும் திறந்துவைக்கவுள்ளதுடன் பின்னர் தெல்லிப்பழை தையிட்டியில் நீர் விநியோக திட்டத்தை திறந்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு யாழ் மத்திய கல்லூரிக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் பின்பு மாலை 4.25 மணியளவில் யாழ்.நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment