ஒலுவில் அப்துல் ஜப்பார் பாயிஸ் ஐக்கிய காங்கிரஸில் அண்மையில் இணைவு



பாலமுனை உதுமாபுரத்தை பிறப்பிடமாகவும் ஒலுவிலில் திருமணம் முடித்துள்ள அப்துல் ஜப்பார் பாயிஸ் ஐக்கிய காங்கிரஸில் அண்மையில் இணைந்துகொண்டார்.
இவர் ஐக்கிய காங்கிரஸ் (உல‌மா) க‌ட்சியின் பாலமுனை, ஒலுவில் பிரதேச அமைப்பாளராக க‌ட்சியின் தலைவர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்தில் விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் பட்டதாரி பயிலுனராக( அபிவிருத்தி உத்தியோகத்தர்) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தற்போது கடமையாற்றிவருகின்றார்.
பல சமூக சேவை அமைப்புகளில் பங்கேற்று பல தொண்டுகளை மக்களுக்காக செய்துள்ளதோடு, அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் கடமையாற்றி வருகின்றார்.
பாலமுனை எவர்கிரீன் விளையாட்டு கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டு இளைஞர்களை விளையாட்டின் பால் ஊக்கப்படுத்தி பல திறமையானவீரர்களை உருவாக்கியுள்ளர்.

தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌ செய‌ற்பாட்டாள‌ராக‌ இருந்த‌ இவ‌ர் ச‌மூக‌த்தின் அர‌சிய‌ல் மாற்ற‌த்துக்கு ம‌க்க‌ளை ஏமாற்றாத‌, நேர்மையான‌ அர‌சிய‌ல் த‌லைமையின் அவ‌சிய‌ம் ப‌ற்றி உண‌ர்ந்த‌த‌னால் அத்த‌கைய‌ த‌குதிக‌ள் உள்ள‌ ஐக்கிய‌ காங்கிர‌சில் இணைந்து கொண்ட‌த‌ன் மூல‌ம் ச‌மூக‌த்தின் உண்மையான‌ குர‌லாக‌ தான் செய‌ல்ப‌ட‌ முடியும் என‌ தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :