இவர் ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சியின் பாலமுனை, ஒலுவில் பிரதேச அமைப்பாளராக கட்சியின் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்தில் விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் பட்டதாரி பயிலுனராக( அபிவிருத்தி உத்தியோகத்தர்) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தற்போது கடமையாற்றிவருகின்றார்.
பல சமூக சேவை அமைப்புகளில் பங்கேற்று பல தொண்டுகளை மக்களுக்காக செய்துள்ளதோடு, அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் கடமையாற்றி வருகின்றார்.
பாலமுனை எவர்கிரீன் விளையாட்டு கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டு இளைஞர்களை விளையாட்டின் பால் ஊக்கப்படுத்தி பல திறமையானவீரர்களை உருவாக்கியுள்ளர்.
தேசிய காங்கிரசின் தீவிர செயற்பாட்டாளராக இருந்த இவர் சமூகத்தின் அரசியல் மாற்றத்துக்கு மக்களை ஏமாற்றாத, நேர்மையான அரசியல் தலைமையின் அவசியம் பற்றி உணர்ந்ததனால் அத்தகைய தகுதிகள் உள்ள ஐக்கிய காங்கிரசில் இணைந்து கொண்டதன் மூலம் சமூகத்தின் உண்மையான குரலாக தான் செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment