முடக்கப்பட்ட வளத்தாப்பிட்டிக்கு இன்று உலருணவுப்பொதிகள் வழங்கப்படும்!சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனிபா



வி.ரி.சகாதேவராஜா-
கொரோனாத் தொற்று அதிகரித்த காரணத்தினால் கடந்த 4ஆம் திகதி முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக் கிராம மக்களுக்கு இன்று(7) திங்கட்கிழமை 5000ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கப்படவிருக்கின்றன என்று சம்மாந்துறைப்பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபா தெரிவித்தார்.

முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக்கிராமத்தை 24மணிநேரமும் கண்காணிப்பதற்கென பழையவளத்தாப்பிட்டியில் கிராமசேவையாளர் ரவி தலைமையில் பிரதேசசெயலக ஊழியர்கள் ஜவர் நியமிக்கப்பட்டு மக்களது தேவைகளை வழங்கி கண்காணித்துவருகின்றனர்.

தவிர புதிய வளத்தாப்பிட்டிக்கிராமத்துள் கொவிட் கிராமமட்டக்குழுவும் இயங்கிவருகின்றது.

பிரதேச செயலாளர் ஹனிபா மேலும் கூறுகையில்:
அம்பாறை நகரிலிருந்து கிழக்காக 9கி.மீற்றர் தொலைவில் அம்பாறை காரைதீவு பிரதானவீதியில் அமைந்துள்ளது. சம்மாந்துறை பிரதேச செயலகப்பரிவில் 52கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் வளத்தாப்பிட்டி கிராமசேவையாளர் பிரிவு என்பது 1200குடும்பங்களைக் கொண்டது.
இக்கிராமசேவையாளர் பிரிவில் புதிய வளத்தாப்பிட்டி பழைய வளத்தாப்பிட்டி பளவெளி இஸ்மாயில்புரம் எனும் நான்கு கிராமங்கள் வருகின்றன.
இந்நான்கு பிரிவுகளில் ஒன்றான புதியவளத்தாப்பிட்டிக்கிராமத்தில் 450குடும்பங்கள் வருகின்றன அங்கதான இந்த கொரோனாத் தாக்கம் தீவிரமாகி இன்று 63தொற்றாளர்களின் இனங்காணலுடன் முடக்கப்பட்டிருக்கின்றது.அங்கு ஒரு மரணமும் சம்பவித்திருக்கின்றது.

மக்களுக்குத் தேவையான அடிப்படையான உணவுப்பொருட்களை வழங்குவதற்கு கடந்த 3நாட்களாக அங்கு மரக்கறி மீன் விற்பனையாளர்கள் சிலருக்கு அனுமதி வழங்கியிருந்தோம். அவர்கள் பணத்திற்கு அவற்றைப்பெற்றுக்கொள்வதற்கு அது வசதியாகவிருந்தது.

எனினும் அங்குள்ள மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வசதிகுறைந்த நிலையிலிருப்பதால் 7நாட்களுள் வழங்கப்படவேண்டிய அரசின் 5ஆயிரம் ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகளை இன்று(7)திங்கட்கிழமை வழங்கத்திட்டமிட்டுள்ளோம்.

இக்கிராமம் முடக்கப்பட்nருப்பதால் கொரோனவுக்குரிய அரசின் 5000ருபா கிடைக்கவாய்ப்பில்லை.ஆனால் சமுர்த்திக்கொடுப்பணவு வழங்கப்படும் அத்துடன் முடக்கத்திற்குரிய வருமானம்குறைந்தவர்களுக்கான 10000ருபா பெறுமதியான இரு உலருணவுப்பொதிகள் 7நாட்கள் வித்தியாசத்தில் வழங்கப்படும்.இதைவிட முடக்கப்பட்ட பிரதேசத்தினுள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு வருமான வரையறை பார்க்காமல் அனைவருக்கும் அதற்கான 5000ருபா வீதம் இருகொடுப்பனவு உலருணவாக வழங்கப்படும்.

அங்குள்ள அரசஊழியர்கள் என்றாலும் அவர்கள் ஆரம்பகட்ட ஊழியர்கள் என்பதால் சம்பளம்குறைவு. இடம்பெயர்ந்து மீள்குடியேறியிருப்பதால் கடன்பெற்று தேவைகளை செய்வதனால் சம்பளம் மேலும் குறைவு. அதுமாத்திரமல்ல நாட்கூலியுடன் கடமையாற்றும் அரசஊழியர்களுமுள்ளனர்.
இவர்களையிட்டு அரசஅதிபரோடு பேசி ஏதாவது பெற்றுக்கொடுக்கலாமா என்பதையிட்டு கலந்துரையாடிவருகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :