எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இதுவரை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
இதற்கான காரணமும் தற்போது வெளியாகியிருக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டபோது சஜித் பிரேமதாஸ அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை.
எனினும் இறுதியில் அதாவது கடந்த 13ஆம் திகதிக்குப் பின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
முன்னாள் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்னவின் தலையீட்டில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இறுதியில் பயணக்கட்டுப்பாடு காரணமாக சஜித் பிரேமதாஸவுக்குத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமற் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment