கொரோனா அச்சுறுத்தலிலிருந்து விடுபட்டு, நிம்மதியாக வாழ்வதற்கு பிரார்த்திப்போம்-முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர்


கி
ழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

கொரோனா மூன்றாவது அலை முழு உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு, அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கும், உலகின் அமைதி, சமாதானத்திற்காகவும் சகலரும் இப்பெருநாள் தினத்தில், இறைவனிடத்தில் பிரார்த்திப்போம் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

புனித ரமழான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்று, ஆன்மீக மேம்பாட்டிக்காக வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு, ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும், அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

கொரோனா வைரஸானது மக்களுடைய அன்றாட செயற்பாடுகளை முடக்கி, பெரும் இழப்புக்களையும் ஏற்படுத்தி வருகிறது. இன்னும் பல நாடுகள் அதிலிருந்து மீள முடியாமல் உள்ளது. அந்த வகையில் அதன் அபாயத்தில் இருந்து எமது நாடும் இன்னும் விடுபடவில்லை. குறித்த தொற்று நோயினை கட்டுப்படுத்தி நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கமும், சுகாதாரத்துறையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதற்கு சகல தரப்பினரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

எமது நாட்டிலே கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக சமய ரீதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது, எவ்வாறு அதனை நாம் கடைப்பிடித்து செயற்பட்டமோ, அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் செயற்பட வேண்டும். குறித்த கட்டுப்பாடுகளினால் ரமழான் மாதம் நாம் பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்நோக்கி இருந்தாலும், அதில் எமக்கு பல படிப்பினைகளும் உள்ளன. மேலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், கஷ்டங்கள் நீங்க அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போம்.

எனவே, கொரோனா அச்சம் தொடர்ந்தும் காணப்படுவதால் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சகலரும் இப்பெருநாள் தினத்தினை தத்தமது வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுவது காலத்தின் தேவையாகும். மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அழகிய வழிமுறையில் இப்பொருநாள் தினத்தினை கொண்டாடி மகிழ்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.சுபைர்,
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்.
ஸ்ரீ.ல.சு கட்சியின் மட்டக்களப்பு, மாவட்ட தலைவர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :