கல்குடா சிகையலங்கார தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடா தொகுதி சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிகையலங்கார தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.

வாழைச்சேனை – மாவடிச்சேனை ரவ்லதுல் அத்பால் பாலர் பாடசாலை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.அஸ்பீர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். நெளபர், கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சாதாத், பலநோக்கு கூட்டுறவுச் சங்க உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஹாதி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்குடா தொகுதி சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட நோன்பு திறக்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :