ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் சஜித், ஐதேக அணியிடம் உறுதியான கொள்கை இல்லை- ஹாபிஸ் நசீர் எம்பி


ஏறாவூர் செய்தியாளர்-
கொவிட் தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்பினரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினரோ கடந்த தேர்தல்களின்போது எதுவித உறுதியான கருத்தையும் தெரிவிக்கவில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்திற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது தற்போதைய அரசாங்கத்துடன் மேற்கொண்ட சினேகபூர்வ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையையே முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத்தெரிவித்தார்.

மாகாண சபை முறைமையை இல்லாதொழித்தமை தொடர்பிலும் கருத்துக் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :