கொரோனா தொற்று பரவல் காரணமாககிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தற்காலிகமாக மூடல்,மாகாணப் கல்விப் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லை,


எப்.முபாரக் -

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிருவாக பிரிவில் பத்து பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிருவாக பிரிவு தற்காலிக மூடப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப்
பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் இன்று(17) தெரிவித்தார்.

கடந்த 10 ம்திகதி கிழக்கு மாகாண கல்வி
திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதை
அடுத்து நடாத்தப்பட்ட அன்ரிஜன் மற்றும்
பிசிஆர் பரிசோதனைகளின் போது மேலும்
பத்து பேருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்
டதை அடுத்து தொற்று உறுதியானோர்
தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏனைய உத்தியோகத்தர்கள்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள
தாகவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை
மாகாண கல்வி பணிப்பாளரை பிசிஆர் பரி
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட
போது அவருக்கு கொரோனா தொற்று
இல்லை(Negative) எனவும் அறிவிக்கப்
பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :