யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி, மொனராகலை மற்றும் கம்பஹாவில் அமைந்துள்ள இந்த சுகாதார அறைகள் COVID-19 தொற்றுநோய் பரவல் முடிவடைந்த பின்னரும் கூட மாணவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும். மாணவர்கள் தங்களது பார்வையை சோதித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன் ஏனைய சுகாதார சேவைகளையும் அணுக முடியும். இந்த சுகாதார அறைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி முகவரமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக உதவியளிக்கப்பட்டது.
“50 வருடங்களுக்கு மேலாக, அமெரிக்காவின் உலகளாவிய சுகாதார திட்டங்கள் உயிர்களை காப்பாற்றியுள்ளன, நோயால் மிகவும் பாதிப்படையக்கூடிய மக்களை பாதுகாத்துள்ளன மற்றும்
ஸ்திரமான சமூகங்களை ஊக்குவித்துள்ளன,” என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார். “சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை தனிமைப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவதன் மூலமும் இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் மாணவர்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் COVID-19 பரவலை குறைக்க நாம் உதவுகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆய்வுகூட முறைமைகளை தயார்படுத்தல், நோயாளியை கண்டறிதல் மற்றும் நிகழ்வு அடிப்படையிலான கண்காணிப்பை செயல்படுத்துதல், மற்றும் பதிலளிப்பு மற்றும் தயார்நிலைக்கு தொழில்நுடு;பு நிபுணர்களுக்கு உதவுதல் ஆகியவற்றின் மூலம் COVID-19 இற்கு எதிராக போராடுவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு உதவுகிறது. இந்த சுகாதார அறைகளானது அமெரிக்கா
இலங்கைக்கு வழங்கியுள்ள 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும்அதிகமான COVID-19 உதவியின் ஒரு பகுதியாகும்.
0 comments :
Post a Comment