COVID-19 இன் போது மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 120 பாடசாலைகளுக்கு உதவும் அமெரிக்க அரசாங்கம்



கொழும்பு, ஜனவரி 29: வலய மற்றும் மாகாண கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் 120 பாடசாலைகளில் அமெரிக்கா சுகாதார அறைகளை அமைத்து வருகிறது. இது இலங்கையின் ஆயிரக்கணக்கான மாணவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுவதற்கான முன்னெடுப்பொன்றாகும். COVID-19 இற்கு எதிரான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான கல்வி அமைச்சின் பரிந்துரைகளை இந்த சுகாதார அறைகள் ஊக்குவிபதுடன் படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி உபகரணங்கள், நகர்த்தக்கூடிய மறைப்பு திரைகள், மற்றும் நீர் விநியோகிப்பான்கள் ஆகியவற்றை இவை கொண்டிருக்கும். தேவைப்படும் பட்சத்தில் இந்த அறைகள் மாணவர்களுக்கான தனிமை மற்றும் தொடர்புடைய கவனிப்பை வழங்குகின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி, மொனராகலை மற்றும் கம்பஹாவில் அமைந்துள்ள இந்த சுகாதார அறைகள் COVID-19 தொற்றுநோய் பரவல் முடிவடைந்த பின்னரும் கூட மாணவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும். மாணவர்கள் தங்களது பார்வையை சோதித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன் ஏனைய சுகாதார சேவைகளையும் அணுக முடியும். இந்த சுகாதார அறைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி முகவரமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக உதவியளிக்கப்பட்டது.

“50 வருடங்களுக்கு மேலாக, அமெரிக்காவின் உலகளாவிய சுகாதார திட்டங்கள் உயிர்களை காப்பாற்றியுள்ளன, நோயால் மிகவும் பாதிப்படையக்கூடிய மக்களை பாதுகாத்துள்ளன மற்றும்

ஸ்திரமான சமூகங்களை ஊக்குவித்துள்ளன,” என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார். “சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை தனிமைப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவதன் மூலமும் இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் மாணவர்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் COVID-19 பரவலை குறைக்க நாம் உதவுகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆய்வுகூட முறைமைகளை தயார்படுத்தல், நோயாளியை கண்டறிதல் மற்றும் நிகழ்வு அடிப்படையிலான கண்காணிப்பை செயல்படுத்துதல், மற்றும் பதிலளிப்பு மற்றும் தயார்நிலைக்கு தொழில்நுடு;பு நிபுணர்களுக்கு உதவுதல் ஆகியவற்றின் மூலம் COVID-19 இற்கு எதிராக போராடுவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு உதவுகிறது. இந்த சுகாதார அறைகளானது அமெரிக்கா

இலங்கைக்கு வழங்கியுள்ள 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும்அதிகமான COVID-19 உதவியின் ஒரு பகுதியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :