ஏறாவூர் நகரில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு, களத்தில் பொலிஸார்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரான காலநிலை நிலவிய போதும் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் வெள்ளநீர் வடிந்தோட முடியாதுள்ள காரணத்தால் அப்பகுதி நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
இதன் காரணமாக குறித்த பகுதியால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளன.

அத்துடன், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

குறித்த பகுதியால் செல்லும் வாகனங்களை மாற்று வழிகளிகள் ஊடாக பாயணிக்குமாறு களத்தில் நின்று ஏறாவூர் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :