அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிங்கமலை வனப்பகுதியில்
ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே பிரிவை சேர்ந்த 65 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான எம்.மகேஸ்வரன் என்பவரே 21/01 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் 11.01.2021. திங்கள்கிழமை காலை 11மணியளவில்
சிங்கமலை வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர் வீட்டிற்கு வராத நிலையில் ஹட்டன் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இனைந்து
தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே வனப்பகுதியில் இருந்து விறகு கட்டோடு குறித்த சடலம் மீட்கபட்டதாகவும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
மீட்கபட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment