இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் சென்னையில் மரணம்! நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்!!



பி.எஸ்.ஐ.கனி-
லங்கையை சேர்ந்தவர் முகம்மது ரிஸ்வான் (38). வியாபார ரீதியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவர் மரணமடைந்த செய்தியை, இலங்கையிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட உடன் முஹம்மது ரிஸ்வானின் தாயார் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயிலை தொடர்புகொண்டு அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அதனடிப்படையில் இலங்கை தூதரகம் மற்றும் காவல் துறை விசாரணை முடிந்தவுடன் இன்று (08-01-21) பிரேத பரிசோதனைக்கு பிறகுஎஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் துறைமுகம் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஹார்பர் ஹாஜா, 56 வது வட்ட தலைவர் யாசர் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர், முஹம்மது ரிஸ்வான் உடலை இஸ்லாமிய முறைப்படி சென்னை ராயப்பேட்டை அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :