அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சிலோன் மீடியா போரம் உலர் உணவுப் பொதிகளை அவர்களது வீடுகளுக்குச் சென்று
வழங்கி வைத்தனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு உரிய பொதிகளை அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு கடந்த 19 நாட்களாக தனிமைப்படுத்தலில் சிரமப்படும் கல்முனை பிரதேச தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு நேற்று (15) மாலை அவர்களது வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்தனர்.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத்.ஏ.மஜீத் தலைமையில் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் யு.என். நூறுள் ஹுதா உமர், உயர் பீட உறுப்பினர்களான முஹம்மட் றிம்ஸான், எம்.என்.எம்.அப்றாஸ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இங்கு கலந்து கொண்டனர்.
முதலாம் கட்ட நிவாரண பணிகளை கடந்த மாதம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கியிருந்தது.
இவ்வமைப்பு இவ்வாறான சேவைகளை ஊடகவியலா
ளர்களுக்கு மட்டுமல்லாது சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment