J.f.காமிலா பேகம்-
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐஸ் கிரீமிலும் கொரோனா தொற்று பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் டியன்ஜின் நகரில் உள்ள நிறுவனத்தின் 3 வகையான ஐஸ்கிறீம்களிளேயே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்குள்ள டகியாடோ ஐஸ் கிரீம் என்ற நிறுவனத்தில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதனூடாக மக்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் 4836 ஐஸ் கிரீம் பெட்டிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.இஇதில் 2089 ஐஸ்கிறீம்கள் பொதிதயிடப்பட்டு பண்டகசாலையில் உள்ளன.மீதமானவை1812 பல்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பபப்பட்டுள்ளன.இதில் 935ஐஸ்கிறிம்கள் தேசியசந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் , 65 விற்கப்பட்டுள்ளன.
இந்த ஐஸ்கிறீம் உற்பத்திக்காக யுக்ரேன் நாட்டு பால் மற்றும் நியுசிலாந்து மா ஆகியன பாவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஐஸ்கிறீம்உற்பத்தியை நுகர்ந்தவர்களின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அத்துதுடன் இத்தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள்1662 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இவர்களுக்கு PCRபரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த தொற்று மக்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற தகவலை லீட்ஸ் பல்கலைக்கழக ப்ரொபசர் ஸ்டீவன் க்ரபின் உறுதிப்படுத்தி உள்ளார்.
0 comments :
Post a Comment