மொரவெவ பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட டபிள்யு.ஆர்.ஜகத் குமார வேரகொட கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை மொரவெவ பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட டபிள்யு.ஆர்.ஜகத் குமார வேரகொட இன்று(20) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் தவிசாளர் சமர்ப்பித்த 2021 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலே புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றபோதே ஜகத் குமார வேரகொட புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள ,கோமரங்கடவெல, பதவிசிறீபுர,பட்டினமும் சூழலும், கந்தளாய் பிரதேச சபைகளின் தலைவர்கள்,பிரதேச அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :