முச்சக்கர வண்டியில் பரிசுகள் போன்று எடுத்துச்செல்லப்பட்ட பெருமளவான கேரளக்கஞ்சா பறிமுதல் -படங்கள் இணைப்பு

ட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் கடத்திச்செல்லப்பட்ட பெருமளவான கேரளக்கஞ்சா இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று காலை மட்டக்களப்பு ஊரணி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இவற்றினை கைப்பற்றியுள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றினை சோதனையிட்டபோது குடும்பத்துடன் செல்வது போன்றும் பரிசுகள் கொண்டுசெல்வது போன்றும் பொதுசெய்யப்பட்ட நிலையில் ஐந்து பாரிசல்களில் கேரள கஞ்சா பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஐ.ராஜபக்ஸ தலைமையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியில் இருந்து பாலமுனைக்கு சென்ற நிலையிலேயே குறித்த முச்சக்கர வண்டி சோதனையிடப்பட்டதாகவும் குறித்த முச்சக்கர வண்டியில் சுமார் 10கிலோ கேளர கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :