தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் 24 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி



எப்.முபாரக்-
ம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் 24 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் இன்று (07) மாலை இத்தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.

திருகோணமலை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றி வந்த 24 வயதுடைய இளைஞனுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட போதே உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை நகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வோர்களை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைது செய்யப்படும் நபர்களுக்கு கட்டாயம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :