பெக்கோ இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு



க.கிஷாந்தன்-
ட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா ஆக்ரோயா பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் இடம்பெற்ற பெக்கோ இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் 16.12.2020 அன்று மதியம் கல்குவாரி வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பெக்கோ இயந்திரத்தை செலுத்துகையில் அதன் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, குறித்த சாரதியை மீட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு உயிரிழந்தவர், மஸ்கெலியா கோர்த்தி பகுதியை சேர்ந்த மொஹமட் அலீம் (வயது - 36) ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என தகவல்கள் தெரியவந்துள்ளன.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :