கள அலுவலர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் செயற்திட்டம்.



சர்ஜுன் லாபீர்-
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவின் தலைமையில் கடந்த 2020.11.27 அன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கள அலுவலர்களுக்கு புதிய மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டம் மீண்டும் செயற்படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில் 31.01.2014 க்குப் பிறகு நியமனங்களைப் பெற்று நிரந்தரமாக 05 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த கிராம சேவகர்கள் உள்ளிட்ட கள அலுவலர்களுக்கு இத் திட்டத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 17.12.2020ம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு தங்களுடைய பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :