பிறைந்துரைச்சேனையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு நோயெதிர்ப்பு சக்தி பானம் வழங்கல்

கோ
றளைப்பற்று மத்தி, வாழைச்சேனைப் பிரவிலுள்ள பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமூக நல ஆயுள்வேத வைத்தியர் டாக்டர் செயிட் அலி பஸ்னா பேகம் அவர்களின் வழிகாட்டலுடன் ஆயுர்வேத மத்திய மருந்தகம் நாவலடி உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ஆகியோரினால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுள்வேத உடல் தேற்றிக் குடிநீர் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்து அப்பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் அவர்களின் பணிப்புரைக்கமையவும் மட்டக்களப்பு மாவட்ட சுதேச மருத்துவ உற்பத்திப் பிரிவின் வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி வீ.அனெஸ்டின் அவர்களின் வழிகாட்டலுக்கமையவும் இந்நோயெதிர்ப்பு சக்தி குடிநீர்ப்பானம் வழங்கப்பட்டதாக டாக்டர் பஸ்னா பேகம் தெரிவித்தார்.

சுதேச ஆயுர்வேத நோயெதிர்ப்பு சக்தி பானத்தை வழங்குவதற்காக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நஸீர் மற்றும் 206/C மொகிதீன் சனசமூக நிலையம் தலைவர் ஏ.ஜி.அஸ்லம்
ஆகியோர்களின் உதவியுடன் இவ்வுடல் தேற்றிக் குடிநீர்ப்பானம் வழங்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :