எப்.முபாரக்-
மூதூர் பிரதேசத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று (8)இடம்பெற்றது.
இப்பிரதேசத்தில் கொவிட் 19 தெற்றாளர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவர்களோடு சம்பந்தப்பட்ட சுமார் 106 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை அனர்த்த சமூக சேவைகள் நலன்புரி சங்கத்தின் தலைவரும் மரண விசாரணை அதிகாரியும் திருமணம் பதிவாளருமான
எம். வை. லாபிர் அவர்களினால் வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக 30 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது,இரண்டாம் கட்டங்களில் தனிமைப்படுத்தலில் உள்ள அனைவருக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எஸ்.ஹஸ்ஷாலி,
முன்னாள் முதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக்,
மூதூர் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி டி .எம்.கே.ஐ.திஸாநாயக்க
பள்ளிவாயல் சம்மேளனத் தலைவர் தஷ்ரீக் மெளலவி,
ஹதீப்மார் நலன்புரி சம்மேளனத் தலைவர் எம்.ஏ. நிஷார், அகில இலங்கை சமாதான நீதவான் கலாநிதி அல்ஹாஜ் எச் எம் மஹ்சூம் போன்றோரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment