ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிஸ் ஆட்சியில் உள்ள பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியில்!

இர்ஷாத் ஜமால்-

பொத்துவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவானது, தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களினால் சபையில் இன்று (18) புதன் கிழமை சமர்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டதின் முதலாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றதன் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. வாக்களிப்பின் போது 10 உறுப்பினர்கள் ஆதரித்தும், 11 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். எதிர்த்து அளிக்கப்பட மேலதிக ஒரு வாக்கினால் வரவு செலவு திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், கியாஸ், சவூரா உம்மா, ஜுனைதா வஹாப்தீன், TNA கட்சியின் உறுப்பினர்களான பிரதித் தவிசாளர் பார்த்தீபன், சுபோஹரன், துரைரத்தினம், SLFP கட்சியின் உறுப்பினர்களான அப்துல் மஜீத், கைரூன் நிஷா, தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஜமாகிம் ஆகியோரே ஆதரவாக வாக்களித்தவர்களாவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான, முன்னாள் தவிசாளர் மர்சூக், ரஹீம், ACMC கட்சியின் உறுப்பினர்களான N.H முனாஸ், சதக்கத்துள்ளா, தாஜுதீன், ஆயிஷா, JVP கட்சியின் உறுப்பினர் ஆதம் சலீம், SLFP கட்சியின் உறுப்பினர்களான அன்வர் சதாத், ஜுனைதா உம்மா, சுயேட்சை குழு உறுப்பினர் பக்குருடீன் ஆகியவர்களே எதிர்த்து வாக்களித்தனர். பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அக்கட்சியின் இரு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். அதே நேரம் SLFP கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு வழங்கிய போதிலும் பிறிதொரு குழுவினர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

“தாம் தவிசளரின் மீது கொண்ட நம்பிகையின் காரணத்தினால், அவரால் கொண்டு வரப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டத்தை எதிர்ப்புகள் இன்றி ஆதரித்தோம். ஆனால் நாம் அவர் மீது வைத்த நம்பிக்கையைபாதுகாக்க தவறி விட்டார். சபையின் நடவடிக்கைகளின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. 
இதன் காரணமகவே ஒரு கட்சியாக இருந்தும் கூட எதிர்த்து வாக்களித்தோம். 

வரவு செலவு திட்டதை, இரண்டாம் வாசிப்பிலும் தோற்கடிக்க உள்ளோம். இதன் மூலம் நல்லதொரு தவிசாளரை தேர்வு செய்து, ஊரின் அபிவிருத்தியை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனகுறிப்பிட்டுள்ளனர்
 எதிர் அணியினர்.
தவிசாளர் கொண்டுவரும் வரவு செலவு திட்டம் அதன் முதலாம், இரண்டாம் வாசிப்புகளில் தோல்வி
கானுமாயின், தவிசாளர் பதவி விலக வேண்டும் என்பது சட்டமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :