வெள்ளத்தில் மூழ்கிய மக்களின் பல ஏக்கர் காணிகள் : உடனடி நடவடிக்கையில் வெட்டப்பட்ட முகத்துவாரம்!

நூருள் ஹுதா உமர்-

க்கரைப்பற்று பிராந்தியத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அண்மையில் பெய்துவரும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிதை அடுத்து வெள்ளத்தை அப்புறப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் திருக்கோவில் பிரதேச சபை இயந்திரங்களை கொண்டு இன்று காலை முகத்துவாரம் தோண்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட வழி ஏற்படுத்தப்பட்டது.

அக்கரைப்பற்று பிராந்திய விவசாய விரிவாக்கல் காரியாலய அதிகாரி யூ. எல். ஹமீட் தலைமையில்
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், அலையடிவேம்பு பிரதேச செயலாளர், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் போன்றோரின் ஆலோசனை மற்றும் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வேலை திட்டத்தை அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஏம்.ஏ. றாசிக் களத்தில் நின்று வழிநடத்தினார்.

பிரதேச விவசாய அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இவ்வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :