கல்முனையில் இருந்து ஜனாதிபதிக்கோர் கடிதம்- SLFP அமைப்பாளர் எம்.எச்.எம்.பஷீர்

 

எம். அஸ்னா சீனத்-


ந்த நாட்டின் அதிகபட்ச மக்களின் இதயங்களையும் வென்றெடுத்து, இந்த நாட்டின் அத்தனை அரசியல் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள் homள கெளரவ ஜனாதிபதி அவர்களே!
மாண்பு மிகு பிரதமர் அவர்களே!


உங்களிடம் நாம் மிக மிக பணிவன்புடன் வேண்டுவதெல்லாம், இப்போது பீடித்துள்ள இந்த கொடிய கொரோனாவிலிருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் இறையருளால் மிக விரைவாக மீட்டெடுக்க எங்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்!


கெளரவ ஜனாதிபதி அவர்களே!
🛑கொடிய நோய்க்கு மரணிக்க மக்கள் அஞ்சவில்லை!
🛑மரணித்த பின் எரிப்பதையே அஞ்சுகிறார்கள்!


நாங்கள் எந்தவொரு உரிமையை கேட்டும் உங்களிடம் போர்க்கொடி தூக்கவில்லை, தூக்கப்போவதுமில்லை, மரணித்த பின் எங்கள் உடல்கள் மண்ணோடு மண்ணாக சங்கமிக்கும் இந்தவொரு இறுதி உரிமையை மட்டும் எங்களுக்கு விட்டுத்தாருங்கள் என்றே இதயம் உருகி கேட்கிறோம்!


உடல்கள் நெருப்பில் கருகுவதை நினைத்தே மக்கள் எந்தவொரு நோயையும் வெளிப்படுத்த மறுக்கிறார்கள்! அஞ்சி ஒழிகிறார்கள்! அங்குமிங்கும் முடங்கி கிடக்கிறார்கள்!


இந்த அச்சம் நோய் பரவலை கட்டுப்படுத்த உதவாது! மாறாக இன்னுமின்னும் அதிக பரவலுக்கே வழிசெய்யும்! இது நாட்டுக்கு பேராபத்தாக அமைந்து விடும்!


ஆகவே, இந்த நாட்டின் அரசியல் முழு அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள நீங்கள் எங்கள் மீது கொஞ்சம் இரக்கப்பார்வை செலுத்துங்கள், முதலில் இந்த நோயிலிருந்து விடுபடுவோம்!
பின்பு நாட்டையும், நாட்டு மக்கள் அனைவரையும் செழிப்புற கட்டியெழுப்புவோம்!


ஒவ்வொரு மக்களும் அவரவர்தம் மத முறைப்படி அரச கண்காணிப்பில் அடக்கம் செய்யும் உரிமையை எங்களுக்கு தாருங்கள்!
இறந்த உடலில் இருந்து எந்தவகையிலும் இந்த கொரோணா பிறருக்கு தொற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று W H 0 கூறி இருக்கும்போதும்
இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை
அனைத்து நாடுகளிலும் அடக்கம் செய்ய அனுமதிக்ப்படும்போது நம் நாட்டில் மட்டும் ஏன் பாரபட்சம் காட்டி எரிக்கப்படுகிறது.
️எங்கள் உடல்களை குளிப்பாட்ட தேவையில்லை!
️கபனிடவும் தேவையில்லை!


அரச கண்காணிப்புடன் நேரடியாக எங்கள் மைய்ய வாடிகளில் அல்லது நீங்கள் அடையாளப்படுத்தும் எந்தவொரு மயானத்திலும் எங்கள் உடல்களை முறையாக அடக்கம் செய்ய ஆணை செய்யுங்கள்!


இதுவே எம் மக்களுக்கு நீங்கள் செய்கின்ற மகத்தான பேருதவியாகும்!


எல்லாம் வல்ல இறைவன் உங்கள் மீதும், எங்கள் மீதும் பேரருள் புரியட்டும்!


இந்த நாடும், மக்களும் நலம்பெறட்டும்!


என்றும் அன்புடன், நல் விசுவாசமுடன்
மக்கள் சார்பில்.
Thanking you
Your truly

DR.M.H.M.WAZEER.LLB (Hon)
Organizer For SLFP KALMUNAI ELECTORATE.
2020.11.01


Copy.


Excellency HIGH COMMISSIONER. GENERAL.
HUMAN RIGHTS COMMISSION.
GENEVA.
SWITZERLAND.
-----------
Hon. President.
Would Health organisation.
Geneva.
Switzerland.



Attachments area




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :