ஆழ்கடலில் மூழ்கிய வாழைச்சேனை ஜே.எம். பாயிசின் படகு!

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

டந்த பத்தாம் திகதி வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் துறையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆழ்கடல் படகு காற்றின் வேகத்தினால் கடலில் மூழ்கியதுடன் அதில் பயணம் செய்த மூன்று பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை 10.10.2020 திகதி வாழைச்சேனையில் இருந்து தொழிலுக்காக சென்ற படகு கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதாக வானொலி செய்திகளை தொடர்ந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருகோணமலைக்கு எதிராக வாழைச்சேனை கடற்பரப்பிலிருந்து 57 கிலோ மீட்டருக்கு அப்பால் இப்படகு ஆள் கடலில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பாக படகின் உரிமையாளர் ஜே.எம். பாயிஸ் நேற்று திங்கள் கிழமை இரவு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.


படகினதும் படகில் உள்ள பொருட்களின் மொத்த பெறுமதி 30 லட்சம் ரூபாய் என்றும் படகில் சென்ற மூன்று பேரும் நேற்று மாலை கரை வந்து சேர்ந்ததாகவும் படகின் உரிமையாளர் ஜே.எம். பாயிஸ் தெரிவித்தார்.

இப்படகு வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கத்தின் அங்கத்துவம் பெற்ற படகு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :